ஆண்மை குறைவு · சுய இன்பம் · செக்ஸ் மருத்துவம்

அதிக சுய இன்பம்

அதிக சுய இன்பம்

Masturbation

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

சுய இன்பம் பற்றி மருத்துவர்கள் ஆரோகியமான ஒன்றாக சொல்லி இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நல்லது என்று சொல்ல வில்லை . தனக்கு அது இப்போது தேவை என்ற உணர்வினாலும் ,இதை யாருடனும் பேசி முடிவு எடுக்க முடியாது என்பதாலும் ,காம உணர்வை தூண்டக்கூடிய படங்களும் ,சினிமா ,இன்டர்நெட் போன்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வலை விரித்து வைத்திருப்பதாலும் ஆண் என்ன செய்வது என்று குழம்பி திரிகிறான் .தினமும் பல ஆண்கள் இதே கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள் தான் சுய இன்பம் செய்யலாமா ?

அதனால் என்ன கேடு வரும் ?

சுய இன்பம் செய்வது  உடல் நலம் கொடுக்கக் கூடிய ஒன்று. காம உணர்வினால் ஆண் தவித்து போகும் பொழுது, செக்ஸ் என்னும் செயலுக்கு செல்ல மனம் ஏங்கும் பொழுதும் ஆணுக்கு சுய இன்பம் ஒரு ஆரோகியமான இன்ப வடிகாலாக உதவுகிறது. செக்ஸ் திருமணத்துக்கு முன் நல்லது அல்ல என்பது தற்போதைய கருத்து. எய்ட்ஸ் நோய், ஹெபடிடிஸ், பால்வினை நோய்கள் பற்றிய கவலை உங்களுக்கு அவசியமில்லாமல் போகிறது. 4 முதல் 7  நாட்களுக்கு  ஒரு முறை சுய இன்பம் செய்வது விந்து ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

இப்படி டாக்டர்கள் முழுமையாக சொல்லாமல் விட்டதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் செய்யலாம் என்று தவறாக முடிவெடுத்து பாதிப்புக்கு உள்ளானோர் பலர் மருத்துவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை , ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்பதெல்லாம் முட நம்பிக்கை என்று ஒட்டுமொத்தமாக தள்ள முடியாது. அதே போல சுய இன்பம் செய்ய கூடாது என்று சொல்வோர் பேச்சை கேட்டு விந்து வெளிப்படுத்த பெண்ணை தேடி அலையும் ஆண்களையும் நம் கிளினிக்ல்  பார்த்திருக்கிறோம். அவர்கள் கை பழக்கத்தால் ஆண்மை போய்  விடும் என்று திருமணத்திற்கு  முன் வெளியே பெண்ணை தேடி உறவு கொண்டு தன் உடல் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இதனால் பால் வினை நோய் தனக்கு வந்து விட்டதோ என்று பயந்து திரும்ப திரும்ப வேறு வேறு லேப்களில் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் .

இப்படி வயது வந்த நாள் முதல் ரண வேதனைக்கு  ஒரு ஆண் உள்ளாகிறான் என்பது  பல ஆண்களுக்கு தெரிந்த உண்மை.

இந்த கேள்விகளுக்கு தீர்வாக இந்த பக்கத்தில் உள்ள செய்தி அமைந்துள்ளது.

ஆண்களுக்கு இருக்கும் எந்த குறைபாட்டையும் மருத்துவத்தாலும், பிராணிக் ஹிலிங், ஹிப்னோ தெரபியாலும் சரி செய்ய முடியும் .

உங்கள் செக்ஸ் ஆரோக்கியம் திரும்ப கிடைப்பது உறுதி .

அதிக சுய இன்ப பழக்கம் உங்களுக்கு இருப்பின் அதை தக்க பரிசோதனை, சிகிச்சைகள் முலம் குணப்படுத்தலாம்.

சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது. உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.

ஆண் எப்பொழுதும் தன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள  வேண்டும்.

ஆண்மை குறைவு,செக்ஸ் உறவு, மருத்துவம்,நரம்பு தளர்ச்சி,

 

ஆண் செக்ஸ் · ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம் · Youtube of Coimbatore sexologist

இளம் வயது ஆணின் செக்ஸ் குறைபாடு விறைப்பு இன்மை 

ஆண்களின் செக்ஸ் ரீதியான உடல் அமைப்பு ,வளர்ச்சி இவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . ஆண் விடலை பருவம் அடையும் பொழுது மூளையில் உள்ள பிட்டியுடரி சுரப்பி தூண்டப்பட்டு உடல் வளர தேவையான ஹார்மோனையும் ஆண் உறுப்பு வளர டேச்டோச்டிரோன் -Testosterone-     ஹார்மோனையும்   சுரக்க ஆரம்பிக்கிறது .இது 12  வயது முதல்    18  வயது  வரை நீடிக்கும் .இந்த வயதில் ஆண் மனம் மகிழ்ந்து ,உடல் பூரித்து ,செக்ஸ் கற்பனைகளில் முழ்கி தன்வாழ்வில் இன்பமான நேரமாக  உணர்கிறான் .இது 21  முதல் 23  வயது வரை நீடிக்கும் .   அதற்கு பின் வேலை  ,மேற்படிப்பு , வருமானம் போன்ற பல மன போராட்டங்களின் மத்தியில் தன் ஆண்மை பற்றிய  கவனம் மாறி  உலக நடப்புகளிலும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறான் .ஆண் ஹார்மோன் அளவு இந்த நேரத்தில் டீன் ஏஜ் ல் இருந்ததை விட குறைந்து சமநிலையில் இருக்கும் .சில ஆண்கள் அதிக சுய இன்பம், செக்ஸ்  போன்ற செயல்களில் ஈடுபட்டு தன் ஆண்மை சக்தியை அதிகம் பயன்படுத்தி விடுகின்றனர் . இந்த நேரத்தில் திருமணம் பற்றிய பேச்சு வீட்டில் ஆரம்பிக்கும் பொழுது, தான் உடல் உறவுக்கு தகுதியாக இருக்கிறேனா என்ற பயம் வந்து விடுகிறது.

 ஆண் உறுப்பில் உள்ள இரத்த குழாய்கள் பலவீனமாகி விறைப்பு திசு சுருங்கி டீன் ஏஜ் ல் இருந்தததை விட அளவில் சிறியதாகவும் விறைப்பு தன்மை குறைந்தும் காணப்படும் .தன் உறுப்பு முன்பு போல் இல்லை என்பதால் திருமணம் செய்ய ஆண் பயப்பட ஆரம்பிக்கிறான் .இந்த நிலையில் என்ன மருத்துவம் செய்யலாம் என்று மற்றவரிடம் சொல்ல,கேட்க தயங்கி தானே மருத்துவரை தேடி அலைகிறான் .தனக்கு பெரிய வியாதி வந்து விட்டது என்று எண்ணி மனம் நொந்து வாழ்கிறான் .இந்த சமயத்தில் பேப்பரில் ,டிவி ல் ,சாலையோர விளம்பரங்களில்   என்று பலவித விளம்பரங்களை தேடி கண்டுபிடித்து ஒவ்வொன்றாக  பார்க்க ஆரம்பிக்கிறான் .பல லட்சங்களை கொடுத்து பல மருந்துகளை உண்டு மனம் நொந்து வாழ்க்கை வெறுத்து ஒரு முடிவுக்கு வருகிறான் .           

இனி திருமணம் செய்ய தனக்கு தகுதி  இல்லை  என்பதால் வரும் பெண் சம்பந்தங்களை வேண்டாம்   என்கிறான் .வயது இன்னும் ஆகட்டும்  ,வேலை இல்லை,வருமானம் போதாது ,வீடு கட்ட வேண்டும் ,தங்கை கல்யாணம் முடியட்டும்,இன்னும் நல்ல பெண்ணாக பார்க்கலாம் ,இன்னும் கொஞ்சம் பிஸினெஸ் வளரட்டும் என்று பல சாக்கு போக்கு சொல்லி கல்யாணத்தை தள்ளி  போட்டு தப்பித்து விடுவர் .  இதை மீறி திருமணம் கட்டாயம் ஆனால்    தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் .

இப்படி உங்கள் மனதில் எண்ணம் ஏதேனும் இருந்தால் அதை போக்க தக்க ஆலோசனை வழங்கி உடல் ,உறுப்பு பலவீனங்களை தக்க டெஸ்ட் முலம்   கண்டு பிடித்து  எளிய சிகிசைகளால்  இந்த ஆண்மை குறைவுகளை சரி செய்யலாம் .

திருமணம் செய்ய தகுதி ,விந்தணு சோதனை ,குழந்தை பெற தகுதி ,செக்ஸ் ஆரோக்கியம் ,நீண்ட நேர உடலுறவு தகுதி,ஹார்மோன் டெஸ்ட் ,மன நலம் பெற சிகிச்சை ,உடல் எடை கூட ,குறைய சிகிச்சை , நரம்பு தளர்ச்சிக்கு சிகிச்சை ,சோர்வு ,பயம் விலக சிகிச்சை என்று அனைத்து செக்ஸ் குறைபாடுகளுக்கும்  அறிவியல் முறைப்படி சிகிச்சை பெறலாம் .உங்களுடைய பயம், குறைபாடு என்னவாக இருந்தாலும் அதை நம் பாக்யா ஹெல்த் சென்டரில் குணப்படுத்தலாம் .              

உங்களுக்கும் ,உங்கள் நண்பர் உறவினர் யார் இந்த சிக்கலில் இருந்தாலும் அவர்களுடன் வாருங்கள் .பயம், தயக்கம், கூச்சம் தேவை இல்லை .

ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம்

ஆண் செக்ஸ் சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?

ஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்-

  1. ஆண் உறுப்பில் விறைப்புக் குறைவு
  2. செக்ஸ் செய்வது பற்றிய பயம்
  3. வீட்டில் தனிமை இன்மை
  4. பெண்ணை திருப்தி படுத்த வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு
  5. விந்து முந்துதல்
  6. காம உணர்வு குறைவு
  7. பெண் உறுப்பின் இறுக்கம் குறைவு, அதிகம்
  8. தவறான உடல் உறவு முறைகள்
  9. நண்பர்கள் சொல்வதை வைத்து தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் பிறரைப் போல் செக்ஸ்செய்ய முடியாது என்று தவறாக முடிவெடுப்பது
  10. சினிமா, டிவி, கதைகள் படித்து செக்ஸ் என்பது மிகவும் கடினமான ஒன்று, தன்னால் செய்ய முடியுமா என்பது போன்ற சந்தேகங்களை வளர்த்துக்கொள்வது.

 பாலுறவு சிக்கல்கள் –

இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள குடும்ப அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவதற்கு இது ஒரு காரணம்.

லன்  இல்லாமல் பல மருத்துவங்களை செய்பவரா நீங்கள்?

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

 

இந்த வார்த்தை சில வருடங்களுக்கு முன் அகராதியில் இல்லாத ஒன்று . ஆங்கில மருத்துவ வார்த்தைகளில் இது எந்த வியாதியையும் குறிக்க வில்லை .  ஆனால் ஆண்மைக் குறைவு மருத்துவ விளம்பரங்கள் பத்திரிகையில் வர ஆரம்பித்த பொழுது  இந்த வார்த்தையும் பிரபலமானது .

ஆண்கள் அதிக சுய இன்பம் ,செக்ஸ் உறவில் ஈடுபடும்   பொழுது  அவர்களுடைய உடலில் உண்டாகும் ஹார்மோன் அளவு  அதிகரித்து பின் ஒரு காலகட்டத்திற்கு பின் குறைய ஆரம்பிக்கறது . ஆணின்  டீன் ஏஜ் பருவத்தில் உடல்,ஹார்மோன்,உறுப்பு இவற்றில் வளர்ச்சி மாற்றங்கள் வேகமாக உண்டாகிறது . இந்த பருவத்தில் காம உணர்வுகள்  தலை  தூக்கி ஆணை திக்குமுக்காட செய்கிறது.வளர்ந்து வரும் உடல் இந்த முறுக்கத்தில் கட்டுண்டு விளையாட ஆரம்பிக்கிறது .சுயஇன்பம் ,செக்ஸ் பேச்சு,பார்வை , தேடல் சுக அனுபவ வேட்கை என்று பல விதமான வேகங்களில் முன்னேறி சிக்கலான உறவுகளிலும் பழக்கங்களிலும் சிக்கி தவிக்கிறது . இப்படி சில வருடங்கள் ஓடும் பொழுது எதுவும்  கண்ணுக்கு தெரியாது காதில் கேட்காது,உணர்வில் உரைக்காது  . இப்படி சில வருடங்கள் கரையும் . இனிமையான வருடங்களாக அது இருக்கும் . அப்படியே வாழ்க்கை தொடரும் என்ற  கனவு நனவாகாமல் இருண்ட வாழ்க்கைக்கு தள்ளப்படும் பொழுது உண்டாகும் உடல் மன பாதிப்புகளே நரம்புத்தளர்ச்சி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .

 

கை நடுக்கம் ,சோர்வு , விறைப்பு குறைவு ,விந்து விரைவில் வெளிப்படுதல்,விந்து சிறுநீரில் கழிதல் , உறுப்பு சிறுத்தல் ,கன்னம் குழியாவது ,தூக்கமின்மை , தலை  முடி உதிர்தல் ,விந்து வெளியேற்ற  இயலாமை , காம உணர்வு அதிகமாகும், குறையும் ,கால் நடுக்கம், தயக்கம் ,முகத்தில் களை இல்லாமை , கண்ணுக்கு கீழே கரு வளையம் ,உடல் எடை குறைவது, எடை அதிகரித்து மார்பகம் பெரிதாக வளர்வது , அதிக நேரம் தூங்க நினைப்பது ,வேலை செய்ய விருப்பம் இல்லாமை ,இயலாமை ,திருமண பயம் , பட படப்பு ,  பசியின்மை ,ஜீரண குறைவு ,மலசிக்கல் , கோபம் , பெரிய வியாதி தனக்கு வந்து விட்டதோ என்ற பயம் ,பால் வினை நோய்கள் இருக்குமோ என்ற பயம் இப்படி பல பிரச்சனைகளில் ஏதோ 3 சேர்ந்தது நரம்புத்தளர்ச்சி என்று கருதப்படுகிறது .நம் கிளினிக் ல் கடந்த 15 வருடங்களில் இப்படி தளர்ச்சியுடன் வந்த  ஆண்களில் நாம் பார்த்தவை இவை .

இப்பொழுது   இவை எதனால் வருகிறது   என்று ஆரோய்வோம் .

ஹார்மோன் அளவு அதிகரிக்கும் பருவத்தில் அதை வேகமாக இயக்கி மகிழ்ந்து , பின் உடல் உற்பத்தி திறன் குறையும் பொழுது பலவீனமாக   உணர்வது. விதை எனப்படும் விந்து உற்பத்தி ஆகும் testis ல் உள்ள சுரப்பிகள் பிடுடறி ( pituitary )   சுரப்பியுடனும் ,அட்ரினல் ,thyroid  சுரப்பியுடனும் சேர்ந்து ஒரு orchestra போல உடலை வடிவமைக்கிறது .இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக விந்து வெளியேற்றப் படும் பொழுது இந்த ஹார்மோன் மண்டலம் வேகமாக சுரப்பிகளை இயக்கி பின் ஒரு கால கட்டத்திற்குப் பின் சோர்வடைகிறது . இதன் விளைவாக   பல மண்டலங்களும் பாதிக்கப் பட்டு மேற்சொன்ன குறைகளாக  வெளிப்பட ஆரப்பிக்கும் .

பிராண உடல்

சக்கரங்கள் நம் உடல் உறுப்புகளுக்கு நாளமில்லா சுரப்பிகள் மூலம்   எனெர்ஜி எடுத்து கொடுக்கின்றன .இந்த பிரபஞ்ச பிராண சக்தி நம் உடல் இயக்கத்திற்கு அவசியம் .மனதில் உண்டாகும் எண்ணங்கள் இந்த சக்கரங்களை இயக்கும் .அதிக இயக்கம் எனெர்ஜி அளவை மாற்றி பிராண உடலில் ,சக்கரங்களில் ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்கும் .இது எனெர்ஜி உடல்  குணத்தை கெடுக்கும்  .வியாதி உருவாக்கும் .

மனம்

இன்பமாக தெரியும் காம உணர்வை தூண்டும்  காட்சிகள் ,செயல்கள்    ,எண்ணங்கள் ரகசிய கிளர்ச்சியை கொடுத்து மீண்டும்   மீண்டும் அதை நினைத்து ரசித்து உறுப்பை தூண்டி மகிழ  செய்யும் .  இந்த எண்ணங்கள் இன்பமான பதிவுகளாக இருப்பதால் இதை உற்பத்தி செய்ய பல விதமான generator கள் உருவாகும் . அவை சின்ன துண்டுதல்களுக்கே –porn photo ,lady ,thought of a sex scene,lady voice ,smell ,dress of a lady ,objects looking like a lady body –   அதிக அளவு எண்ணங்களை உருவாக்கும் வண்ணம் லிங்க்   link செய்யப்பட்டிருக்கும் .  மேற்சொன்ன ஏதொ ஒன்று  மனதில் நினைவுக்கு வந்தாலோ,கண்ணில் பட்டாலோ உடனே அது கம உணர்வை தூண்டி சுய இன்பம் /செக்ஸ் ல்  முடியலாம் .இப்படி உண்டாகும் சரவெடி பட்டாசு மனிதனின் உடலையும் மனதையும் ,நாடி நரம்புகளையும் வெடித்து சிதற  செய்ததன் விளைவுதான் நரம்பு தளர்ச்சி .

இப்போது புரிகிறதா    ?

என்ன   மருத்துவம் செய்தாலும் 20 -30  %  மட்டுமே பலன் கிடைப்பதும் ,அந்த மருந்து தீர்ந்தவுடன் பிரச்னை மீண்டும் தலை தூக்குவதும்  ஏன் என்று ?

இந்த நரம்புத்தளர்ச்சி நோய் அப்படியே தொடர்ந்து விடாமல் இருக்க நம் கிளினிக் ல் மனிதனின் 3  உடல்களுக்கும் சிறப்பான சிகிச்சை எடுத்து   பூரண குணம் பெற முடியும் .