ஆண்மை குறைவு · சுய இன்பம் · செக்ஸ் மருத்துவம்

அதிக சுய இன்பம்

அதிக சுய இன்பம்

Masturbation

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

சுய இன்பம் பற்றி மருத்துவர்கள் ஆரோகியமான ஒன்றாக சொல்லி இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நல்லது என்று சொல்ல வில்லை . தனக்கு அது இப்போது தேவை என்ற உணர்வினாலும் ,இதை யாருடனும் பேசி முடிவு எடுக்க முடியாது என்பதாலும் ,காம உணர்வை தூண்டக்கூடிய படங்களும் ,சினிமா ,இன்டர்நெட் போன்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வலை விரித்து வைத்திருப்பதாலும் ஆண் என்ன செய்வது என்று குழம்பி திரிகிறான் .தினமும் பல ஆண்கள் இதே கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள் தான் சுய இன்பம் செய்யலாமா ?

அதனால் என்ன கேடு வரும் ?

சுய இன்பம் செய்வது  உடல் நலம் கொடுக்கக் கூடிய ஒன்று. காம உணர்வினால் ஆண் தவித்து போகும் பொழுது, செக்ஸ் என்னும் செயலுக்கு செல்ல மனம் ஏங்கும் பொழுதும் ஆணுக்கு சுய இன்பம் ஒரு ஆரோகியமான இன்ப வடிகாலாக உதவுகிறது. செக்ஸ் திருமணத்துக்கு முன் நல்லது அல்ல என்பது தற்போதைய கருத்து. எய்ட்ஸ் நோய், ஹெபடிடிஸ், பால்வினை நோய்கள் பற்றிய கவலை உங்களுக்கு அவசியமில்லாமல் போகிறது. 4 முதல் 7  நாட்களுக்கு  ஒரு முறை சுய இன்பம் செய்வது விந்து ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

இப்படி டாக்டர்கள் முழுமையாக சொல்லாமல் விட்டதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் செய்யலாம் என்று தவறாக முடிவெடுத்து பாதிப்புக்கு உள்ளானோர் பலர் மருத்துவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை , ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்பதெல்லாம் முட நம்பிக்கை என்று ஒட்டுமொத்தமாக தள்ள முடியாது. அதே போல சுய இன்பம் செய்ய கூடாது என்று சொல்வோர் பேச்சை கேட்டு விந்து வெளிப்படுத்த பெண்ணை தேடி அலையும் ஆண்களையும் நம் கிளினிக்ல்  பார்த்திருக்கிறோம். அவர்கள் கை பழக்கத்தால் ஆண்மை போய்  விடும் என்று திருமணத்திற்கு  முன் வெளியே பெண்ணை தேடி உறவு கொண்டு தன் உடல் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இதனால் பால் வினை நோய் தனக்கு வந்து விட்டதோ என்று பயந்து திரும்ப திரும்ப வேறு வேறு லேப்களில் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் .

இப்படி வயது வந்த நாள் முதல் ரண வேதனைக்கு  ஒரு ஆண் உள்ளாகிறான் என்பது  பல ஆண்களுக்கு தெரிந்த உண்மை.

இந்த கேள்விகளுக்கு தீர்வாக இந்த பக்கத்தில் உள்ள செய்தி அமைந்துள்ளது.

ஆண்களுக்கு இருக்கும் எந்த குறைபாட்டையும் மருத்துவத்தாலும், பிராணிக் ஹிலிங், ஹிப்னோ தெரபியாலும் சரி செய்ய முடியும் .

உங்கள் செக்ஸ் ஆரோக்கியம் திரும்ப கிடைப்பது உறுதி .

அதிக சுய இன்ப பழக்கம் உங்களுக்கு இருப்பின் அதை தக்க பரிசோதனை, சிகிச்சைகள் முலம் குணப்படுத்தலாம்.

சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது. உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.

ஆண் எப்பொழுதும் தன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள  வேண்டும்.

ஆண்மை குறைவு,செக்ஸ் உறவு, மருத்துவம்,நரம்பு தளர்ச்சி,

 

ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம்

திருமண பயமா? செக்ஸ் நாட்டம் இல்லை

“திருமணம் இப்போ வேண்டாம் ” என்று சொல்லுகிறதா உங்கள் பிள்ளை ?

பிள்ளைகள் நடவடிக்கை, பேச்சு, நண்பர்களுடன் பேசுதல், பார்க்கும் டிவி, சினிமா ,அதிக கடவுள் நம்பிக்கை, பூஜை, விரதம், பெண்களை/ ஆண்களை கண்டால் கூச்சம், இதெல்லாம் கவனிக்கப் பட வேண்டும் .திருமணம் வேண்டாம் என்று ஆணோ பெண்ணோ சொன்னால் முதலில் ரகசியமாக கவனியுங்கள்.அதன் காரணத்தை கேள்வி கேட்டு கண்டுபிடிக்க முடியாது .எப்போதும் நமக்கு வெளிப் படையாக பேசி பழக்கம் இல்லையே.கருத்து சுதந்திரம் நாம் தர வில்லையே.காதல் உண்டா ? இல்லை திருமண பயமா? செக்ஸ் நாட்டம் இல்லை என்று சொல்வது 10% உண்மை. அவர்களுக்கு

  1. செக்ஸ் தகுதி, ஆரோக்யம்  இல்லை என்று நினைக்கலாம். ஆண்களுக்கு, தான் ஆண்மை குறைந்தவன் என்று எண்ணம் இருக்கலாம்.
  2. பெண்கள் ஆண்களை பற்றி தவறான கணோட்டம் கொண்டிருக்கலாம்.
  3. செக்ஸ் பயம், தான் இந்த வேலைக்கெல்லாம் ஒத்துவர முடியாது என்ற எண்ணம் .இது பிற பெண்கள் செக்ஸ் பற்றி பேசும் பயங்கர அனுபவங்களை பொருத்து உண்டாகும்.
  4. அதீத கடவுள் பக்தி .செக்ஸ் அதற்க்கு எதிரான செயல் என்ற எண்ணம்.
  5. தன் உணர்வு என்னும் ego வை தளர்த்தி ஆணுடன் பெண் செக்ஸ் உறவில் ஈடுபட  இயலாத அளவு ஒரு வைராக்கியம் ,மன உறுதி.
  6. காதல் என்னும் உறவில் கலந்திருப்பதால் அதை வெளிப் படுத்தி திருமணம் செய்ய தயக்கம், பயம்.
  7. வேறு ஒரு துணை செக்ஸ் உறவில் அடிமைப் படுத்தி, ஏமாற்றி, மிரட்டிக் கொண்டிடுக்கலாம். பல துணைகள் தான் தற்கொலை செய்வேன், இந்த உறவை வெளிப் படுத்தி வாழ்வை நாசம் செய்வேன் என்று பல விதமாக மிரட்டலாம். இதை வெளிப் படுத்தி இந்த துன்பத்திலிருந்து வெளியேற தெரியாமல், முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கலாம் .

இப்படி பல. இந்த மாதிரி எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

உங்கள் பிள்ளை  எதனால் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கவனிக்கவும். தக்க மருத்துவ ஆலோசனை பெற்று தெளிவு பெறவும். கோடிகளை செலவழித்து , அடுத்த வீட்டு ஆட்களுடன் உறவு கொண்டாடி, ஊரைக் கூட்டி செய்யும் திருமணங்கள் பல பொடி பொடியாய் உதிர்ந்து போவது இதனால்தான். உங்களுக்கு காதல் திருமணம் ஒத்து வராது என்றால் அதை முதலிலே பிள்ளையிடம் சொல்லுங்கள். அதற்க்கு மேல் காதல் உங்கள் வீட்டுக்குள் வந்தால் வரவேற்கிறதும் உங்கள் விருப்பம். அவள் இல்லாமல் நான் இல்லை என்று உயிருடன் இணைந்த தம்பதிகளை (? நிறைய பேர் பதிவு திருமணம் செய்து வாழ்கிறார்கள் .உஷார் ) பிரிப்பது அவசியமா என்றும் யோசியுங்கள். அப்படி பிரித்து செய்யும் திருமணத்தில் ஒட்டாது நிற்கும் அந்த இன்னொரு நபரின் நிலை கவலைக்கிடம். எதையும் யோசித்து முடிவெடுங்கள். உங்கள் பிள்ளை மட்டுமல்ல, இந்த திருமணத்தில் பாதிக்கப் படுவது இன்னொரு குடும்பமும்தான் !

உண்மையாக திருமண நாட்டம் இல்லாதவர்களை ஆலோசனைக்கு  அழைத்து செல்லுங்கள், நல்ல மருத்துவரிடம் !

கொஞ்சம் யோசியுங்கள் பெற்றோர்களே !